ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2024-02-05 04:01 GMT


உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது


உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாசப்ரியா அம்பா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி துணை பேராசிரியர் பசுபதி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உதவி பேராசிரியர் திவ்யா சந்திரசேகர் ஆகியோர் முன்னாள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி பாராட்டினர். ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி இயக்குனர் யாக்னா ப்ரானா மாஜி, பள்ளி முதல்வர் சந்திரா, ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News