சைபர் கிரைம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Update: 2024-02-29 07:18 GMT

கூத்தாநல்லூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

எஸ்பி ஜெயக்குமார் உத்தரையின்படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் கூத்தாநல்லூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் மாணவர் மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சைபர் கிரைம் சம்பந்தமான இணைய வழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News