100% வாக்குப்பதிவு துணிப்பை வழங்கி விழிப்புணர் பிரச்சாரம்

மயிலாடுதுறையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகளுக்கு துணிப்பை வழங்கி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்.

Update: 2024-04-08 13:19 GMT

மயிலாடுதுறையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகளுக்கு துணிப்பை வழங்கி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்.


மயிலாடுதுறையில் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இளம் வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துணி பைகளை வழங்கினார்கள்.

உடன் கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ் , மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில் குமார்உள்ளனர்.

Tags:    

Similar News