போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளி மாணவர்கள் காவலர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நடத்தினர்.

Update: 2024-01-28 12:47 GMT

போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

கண்ணப்ப நகர் பகுதியில் அமைந்துள்ள சங்கமம் மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் காந்திபுரம் அடுத்து ஜி.பி. சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது.இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும்,வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது,நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும்,இந்திய போக்குவரத்து சட்டத்தின்படி இடதுபுறத்தில் வாகனத்தை இயக்க வேண்டும், மதிபோதையில் வாகனங்களை இயக்க கூடாது,போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ,மாணவிகள் கையில் ஏந்தியவாறு போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News