100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரியில் 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-03-19 11:06 GMT

 கிருஷ்ணகிரியில் 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 யொட்டி 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு  கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் வந்தனாகர்க் இ. ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைஅலுவலர் முருகேசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News