போதைப்பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-06-27 05:42 GMT

போதைப்பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. 

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 26 ம் நாள் சர்வதேச போதைப்பொருட்கள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு இன்று மதுரை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாநகர துணை ஆணையர்களின் தலைமையில் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

மேலும் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர். மேலும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் உறுதிமொழி எடுக்கப்பட்டும் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு பேரணியில் மதுரை மாநகர சரக உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News