சிவகங்கை: சமூக நெறியை நோக்கி விழிப்புணர்வு பேரணி - மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் தானம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற புதிய சமூக நெறியை நோக்கி விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-04 11:12 GMT

பேரணி

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் தானம் அறக்கட்டளை சார்பில் வாக்கத்தான் 2024 புதிய சமூக நெறியை நோக்கி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா முன்னிலை வகித்தார். புதிய சமூகநெறி தனி மனித மாற்றங்கள், குடும்ப அளவிலான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கான அறப்பண்புகளை வலியுறுத்தும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தி இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Tags:    

Similar News