அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அழைப்பிதழ் வழங்கல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், கிராம மக்களுக்கு மேளதாளத்துடன் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Update: 2024-01-02 11:24 GMT

அழைப்பிதழ் வழங்கல்

செய்யாறு அருகே அனக்காவூரில் அயோத்தியில் ஜனவரி மாதம் 22 ல் ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெறுகிறது இதனை ஓட்டி அயோத்தியில் ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அச்சதை மற்றும் ராமபிரான் படம் ராமர் கோவில் ப்ராண பிரதிஷ்டை அழைப்பிதழ் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கனகவள்ளி தாயர் வீரராகவ பெருமாள் ஆலயத்தில் பூஜிக்கப்பட்டு அனைத்து வீடுகளிலும் கொடுத்தனர்.

மற்றும் குடமுழுக்கு அன்று அனைத்து வீடுகளிலும் வாசல் முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று மக்களிடம் வீடு வீடாக சென்று கூறப்பட்டது இவ்விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழி மோகன் மற்றும் துணை தலைவர் கோமலா மகேஷ்,அருள் மற்றும் ஊர் பெரியவர்கள் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் செய்யாறு சட்டமன்றம் அமைப்பாளர் க.ஜெகந்நாதன் மற்றும் பாஜகவின் ஒன்றியதலைவர் ராஜ் மற்றும் பொதுச்செயலாளர் கண்ணன் ஆர்எஸ்எஸ் அனக்காவூர் ஒன்றிய அமைப்பாளர் சரவணன் மற்றும் சங்க பரிவார் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News