பாபர் மசூதி இடிப்பு தினம். குமரி திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு .

பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஓட்டி குமரி திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2023-12-04 13:09 GMT
திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை மறுதினம் ஆறாம் தேதி வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலும் எஸ் .பி சுந்தரவதனத்தின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.      

மாவட்டம் முழுவதும் உள்ள நான்கு துணை போலீஸ் சரகங்களிலும் அந்தந்த டிஎஸ்பிகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ் ஐ -கள், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.      

 கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜுகளிலும் போலீசா சோதனை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது தங்கியுள்ளார்களா என்று சோதனை நடந்து வருகிறது.      

மேலும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கடலோரப் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News