பூந்தமல்லியில் குப்பைகளால் துர்நாற்றம்

பூவிருந்தவல்லி அருகே திருமழிசையில் காலியிடத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.

Update: 2024-06-10 08:22 GMT

குவிந்துள்ள குப்பைகள் 

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, திருமழிசை சிவன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர். சிலை அருகில் காலி மனை ஒன்று உள்ளது. இதில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். அந்த காலி மனைக்கு அருகில் சிவன் கோயில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரா சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



Tags:    

Similar News