9 கடைகளில் உரம் விற்க தடை

சேலம் மாவட்டத்தில் 9 கடைகளில் உரம் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-30 17:44 GMT

கெங்கவல்லி 

சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தலைமையில் மாவட்ட, வட்டார அளவில் கண்காணிப்பு, நிலைக்குழு அமைக்கப்பட்டு, 6 கூட்டுறவு, 30 தனியார் உரக்கடைகளில் சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தம்மம்பட்டியில், 4, தலைவாசலில், 2, ஆத்துார், கெங்கவல்லியில் தலா, 1 என, 9 தனியார் உரக்கடைகளில் உரம் விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பு பராமரிப்பு இல்லாதது, பதிவேடு, பட்டியல், மாத இருப்பு அறிக்கை உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்ட, 21 கடைகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News