சூறைக்காற்று வீசியதில் வாழை மரங்கள் முறிந்து சேதம்

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே சூறைக்காற்று வீசியதில் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

Update: 2024-04-12 11:17 GMT

வாழை மரங்கள் சேதம்

 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கெட்டவாடி கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதில் 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாழைகள் முறிந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News