கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கோரிக்கையை வலியுறுத்தி, மல்லசமுத்திரம் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

Update: 2024-02-23 10:04 GMT
தமிழ்நாடு கிராம பேங்க் ஆபிஸர்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு கிராம பேங்க் ஒர்க்கர்ஸ் யூனியன், தமிழ்நாடு கிராம பேங்க் ரிடைரீஸ் சங்கங்களின் சார்பில் ஸ்பான்சர் வங்கிகளின் பிடியில் இருந்து வங்கிகளை விடுவித்து தேசிய கிராம வங்கிகளை உருவாக்க வேண்டும். கிராம வங்கிகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களில் உடனடியாக நிரப்பிட வேண்டும். தற்காலிக கடை நிலை ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பென்சன் திட்டத்தை வணிக வங்கிகளை போல் முழுமையாக அமல்படுத்திட வேண்டும். கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட், கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை சரியான முன் தேதியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மல்லசமுத்திரம் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் பொதுமக்கள் வங்கி பரிமாற்றம் செய்ய முடியாமல் மிகுந்த பாதிப்படைந்தனர்.
Tags:    

Similar News