மாற்று திறனாளிகளுக்கான வங்கிகடன் மேளா
மாற்று திறனாளிகளுக்கான வங்கிகடன் மேளா நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 14:45 GMT
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்று திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிகடன் மேளா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 86 மாற்று திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு சம்மந்தபட்ட வங்கி மேலாளர்களுக்கு பரிந்துரை செய்யபட்டது.
மேலும் 2 மாற்று திறனாளிகளுக்கு வங்கிகடன் வழங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டு தலா 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதற்கான ஆணை உடனடியாக வழங்கபட்டது. இதில் முன்னோடி வங்கி மேலாளர்கள் மற்றும் அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.