போக்சோ வழக்கில் பனியன் கம்பெனி ஊழியர் கைது

காங்கேயம் அருகே போக்சோ வழக்கில் பனியன் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-21 01:46 GMT

காங்கேயம் அருகே போக்சோ வழக்கில் பனியன் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.  

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த நாரனாபுரம் அறிவொளிநகரை சேர்ந்தவர் வரதராஜ் என்பவர் மகன் தீனா என்கிற ஆனந்தன் வயது 24. இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் கட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஊத்துக்குளி தாலுக்கா மொரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகித்த பெற்றோர்கள் மருத்துவமனை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தபோது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்ததை அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலிஷார் வழக்கு பதிவு செய்து தீனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News