தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடைகளை மூடல்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை அரசு உத்தரவின்படி மதுக்கடைகளை மூட வேண்டும் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-04-30 03:33 GMT

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை அரசு உத்தரவின்படி மதுக்கடைகளை மூட வேண்டும் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். 

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். மேலும் உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்களும் மூட வேண்டும். மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

Similar News