சிறந்த பள்ளிக்கான விருது ஆத்தூர் காந்திநகர் நடுநிலைப்பள்ளி தேர்வு

சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ஆத்தூர் காந்திநகர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2024-03-07 04:35 GMT

பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறந்த பள்ளிக்கான விருதை வழங்கினார் சேலம் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் தேர்வானது இதில் ஆத்தூர் காந்திநகர் நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருதை பள்ளி ஆசிரியர் பெற்றுக் கொண்டார்

இந்நிலையில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளியில் ஆத்தூர் சேவை சங்கம் ஆத்தூர் சென்ட்ரல் ரோட்டரி சங்க நிறுவன தலைவர்,துணை ஆளுநர் ,தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News