பகவதி அம்மன் கோவிலில் இரவு 7-30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது

இன்று சந்திரகிரகணத்தை முன்னிட்டு பகவதி அம்மன் கோவிலில் இரவு 7-30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

Update: 2023-10-28 11:31 GMT

பகவதி அம்மன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தின மும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப் பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்ப தற்காக கோவில் நடை அடைக்கப்படும். அதன்படி சூரிய கிரக ணத்தையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டா ர்கள். அதன்பின்னர் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப் பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரி சனத்தி ற்கு அனுமதிக்கப்ப டுவார்கள். இந்த தகவலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News