பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் சேதம்

கள்ளக்குறி்ச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் சேதம் செய்யப்பட்டது.

Update: 2024-01-27 04:44 GMT


கள்ளக்குறி்ச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் சேதம் செய்யப்பட்டது.


கள்ளக்குறி்ச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் 27 ம் தேதி(இன்று) ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் இருந்து பஸ் நிலையம் வரை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும், என் மண். என் மக்கள் யாத்திரை நடக்கிறது.இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் அருள் தலைமையில் பா.ஜ., வினர் வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக உளுந்துார்பேட்டை டோல்கேட் முதல் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் பகுதி வரை பா.ஜ.,கட்சி கொடிக்கம்பங்கள், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திருச்சியில் நடைபெறும் வி.சி.,மாநாட்டிற்கு, உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக கட்சியினர் வேனில் சென்றனர். அப்போது சிலர் டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ., கொடிகளை பறித்து கீழே வீசிவிட்டு சென்றனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News