ராஜாக்கமங்கலத்தில் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-19 02:45 GMT
ராஜாக்கமங்கலத்தில் பா ஜ ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கும்,  பேரூராட்சிகளாக மாற்றுவதையும்  கண்டித்து ராஜாக்கமங்கலம் ஒன்றிய பா.ஜ.க சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.        மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இராஜாக்கமங்கலம்  ஒருங்கிணைந்த ஒன்றிய தலைவர்கள் பொன் சுரேஷ் , ராஜேஷ் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர் காந்தி கண்டன உரையாற்றினார். ஊராட்சி தலைவர்கள் முத்து சரவணன், ஜெகதீஷ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News