பாரதி பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி

பாரதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-12-12 11:04 GMT

பாரதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பாரத மொழிகள் திருவிழா, பாரதி பிறந்த தினத்தையொட்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

'பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டிக்கு கல்லூரி முதல்வர் அழகுசாமி தலைமை வகித்தார். தமிழ்த்துறை இணை பேராசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். வரலாற்றுத் துறை தலைவர் கலைச்செல்வி, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் நாகராஜன் ஆகியோர் பேசினார். தமிழ் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி பிரித்தா முதல் இடம், வணிகவியல் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் கோபிநாயகம் இரண்டாம் இடம், தமிழ் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி பவித்ரா மூன்றாம் இடம் பெற்றனர். அவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Tags:    

Similar News