குருத்தோலை ஞாயிறு தினத்தை ஒட்டி ஊத்தங்கரையில் பவனி

குருத்தோலை ஞாயிறு தினத்தை ஒட்டி ஊத்தங்கரையில் பவனி நடைபெற்றது.;

Update: 2024-03-24 15:33 GMT
பவனியில் கலந்து கொண்டவர்கள் 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் குருத்தோலை ஞாயிறு தினத்தை ஒட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசுநாதரை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்ட இஸ்ராயேல் மக்கள், தங்கள் கைகளிலே ஒலிவ மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு, இயேசுநாதரை கழுதை மீது அமர வைத்து எருசலம் நகரில் பவனி வந்தனர்.

அப்போது, "உன்னதங்களின் ஒசாண்ணா.. ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர்" எனும் தூதிப்பாடலை பாடியவாறு நகர் வலம் வந்தனர். இந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர். இதன் படி இன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கி,

Advertisement

ஊத்தங்கரை நான்கு மனை சந்திப்பு விதிமுறைகள் வழியாக புனித அந்தோணியார் திருத்தலத்தை வந்தடைந்தது. இந்த குருத்தோலை பவனியில், ஏராளமான கி்றிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஒசாண்ணா பாடலைப் பாடியபடி பவனி வந்தனர். பின்னர், கிருஷ்ணகிரி மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஊத்தங்கரை, உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயத்தில் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News