திருவாரூர் : திருநெல்லிக்காவலில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

திருவாரூர் அருகே திருநெல்வேலி காவலில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

Update: 2023-11-30 07:03 GMT

புதிய சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநெல்லிக்காவல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 52 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார் .திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் .கோவில் செயலாளர் சிங்காரவேல், ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பாக்கியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News