அரசு பள்ளிகளில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை

மாநில நிதி குழு பள்ளி மேம்பாட்டு மானியம் உட்கட்டமைப்பு பணிகள் சார்பில் பள்ளிபாளையம் பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

Update: 2024-01-31 11:31 GMT


மாநில நிதி குழு பள்ளி மேம்பாட்டு மானியம் உட்கட்டமைப்பு பணிகள் சார்பில் பள்ளிபாளையம் பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.


மாநில நிதி குழு பள்ளி மேம்பாட்டு மானியம் உட்கட்டமைப்பு பணிகள் சார்பில்,பள்ளிபாளையம்  ஆவரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் பள்ளிபாளையம் நாட்டான் கவுண்டன் புதூர் நகராட்சி துவக்க பள்ளிக்கு புதிதாக வகுப்பறைகள் கட்டும் பணி, கட்டிட பராமரிப்பு பணி மற்றும் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தூண் அமைத்து குடிநீர் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் ஒரு கோடி இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது.

பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை, நகராட்சி பொறியாளர் ரேணுகா,  வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்றனர்..

Tags:    

Similar News