புதிய நூலகம் கட்ட பூமி பூஜை

அரங்கநாதன் பேட்டையில் புதிய நூலகம் கட்ட பூமி பூஜை நடந்தது.

Update: 2024-03-16 09:19 GMT
அரங்கநாதன் பேட்டையில் புதிய நூலகம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, அரங்கநாதன் பேட்டையில், திமுக கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொறியாளர் அணி துணைச் செயலாளர் சிலம்பரசன், தொழிலாளர் துணை அமைப்பாளர் குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு, ஆதிதிராவிட நலத்துறை அணி அமைப்பாளர் ராமதாஸ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News