வெள்ளகோவில் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை: அமைச்சர் பங்கேற்பு

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-15 12:50 GMT

பூமி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் இலக்குமநாயக்கன்பட்டி ஊராட்சி கம்பளிம்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1.11 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி உள்ளார்.

Tags:    

Similar News