பைக்கில் சென்றவரைத் தாக்கி 10 பவுன் நகை, பணம் பறிப்பு

10 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Update: 2024-02-19 04:20 GMT

நகை பறிப்பு 

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பைனான்சியரை சனிக்கிழமை இரவு தாக்கி 10 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் டி.இடையப்பட்டியை சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் வடிவேல் (43). வட்டிக்கு பணம் கொடுக்கும் இவா் துவரங்குறிச்சி பகுதியில் வசூலை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். ராஜாப்பட்டி விளக்கு பகுதியில் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த 3 நபா்கள், இரும்புக் கம்பியால் வடிவேலைத் தாக்கி அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயின் மற்றும் வசூல் பணம் ரூ.40 ஆயிரத்தைப் பறித்து சென்றனா். அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட வடிவேல் மணப்பாறை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா். வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News