திண்டிவனத்தில் பைக் திருட்டு: சிறுவன் உள்பட 3பேர் கைது

திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-12-14 10:30 GMT
திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையி லான போலீசார் காந்தி சிலை பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்றனர்.

இதைபார்த்து உஷாரான போலீசார், அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டிவனம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ரவீந்திரகுமார் மகன் ராகுல் (வயது 21), திண்டிவனம் வட ஆலப்பாக்கத்தை சேர்ந்த கண்ணன் மகன் முத்துராமன் என்கிற முத்துக்குமரன் (23) மற்றும் திண்டிவ னம் மரக்காணம் ரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், திண்டிவனம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கும் அஜித்குமார் என்பவருடைய மோட்டார் சைக்கிளையும், ஒலக்கூர் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News