தாமிரபரணியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

நெல்லை மாவட்ட தாமிரபரணியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வரும் 16ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது.

Update: 2024-02-11 01:58 GMT
பறவைகள் கணக்கெடுப்பு 
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தாமிரபரணியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளதாக அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வளைகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார். இதில் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கு பிப்ரவரி 16 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தியாகராஜநகரில் உள்ள புஷ்பலதா பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News