சுரண்டையில் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

சுரண்டையில் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-06 01:23 GMT

சுரண்டையில் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் தினசரி மார்க்கெட்டில் நேற்று மாலையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜான்பாண்டியனை ஆதரித்து பாஜக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் சுரண்டை நகர தலைவர் அருணாசலம், கோதை மாரியப்பன், வெற்றிவேல், கே.வி.கண்ணன், சங்கரநாராயணன், ஐயப்பன் தீபம் குமார் உள்ளிட்ட ஏராளமான பாரதி ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News