திருவள்ளூர் தொகுதியில் சுவர் விளம்பரத்தில் முந்தும் பா.ஜ.,

திருவள்ளூர் தொகுதியில் சுவர் விளம்பரத்தில் முந்தும் பா.ஜ.,

Update: 2024-03-21 10:41 GMT

பாஜக 

திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில், ஆங்காங்கே சுவர் விளம்பரங்களை எழுதுவதில் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. முக்கிய தெருக்களின் சந்திப்புகளில், 'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' வாசகம், தாமரை சின்னத்தையும் எழுதி வாக்காளர்களை கவர்ந்து வருகிறது. வழக்கமாக திராவிட கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக வேட்பாளர்பெயர் மற்றும் சின்னம் தவிர்த்து சுவர் விளம்பரங்களை எழுதுவர். திராவிட கட்சிகளை முந்திக்கொண்டு, தற்போது பா.ஜ., சுவர் விளம்பரங்களை எழுதி பிரச்சாரத்தில் முந்தி வருகிறது. வழக்கமாக தேர்தல் நேரங்களில் பா.ஜ., அல்லது கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பிற்கு பின்னரே பிரச்சாரம் இருக்கும். இம்முறை யார் வேட்பாளர் என அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜ., கட்சியினர், மற்ற கட்சியினரை முந்தி பிரச்சார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
Tags:    

Similar News