புதுக்கோட்டை : பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என பாஜக விவசாய அணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

Update: 2023-12-28 15:06 GMT

பாஜக சார்ப்பில் ஆர்பாட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் ராகவன், கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும். கொப்பரை தேங்காய் அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News