சாலை வசதி கேட்டு கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

ஜமுனாமருதூர் அருகே கானமலை ஊராட்சியில் சாலை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-14 15:19 GMT

ஆர்ப்பாட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமருதூர் கானமலை ஊராட்சிக்குட்பட்ட எலந்தம்பட்டு அரசனூர் நீர்த்தொம்பை உள்ளிட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அனைத்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மலைவாழ் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News