மவுண்ட் தேவாலயத்தில் ரத்ததான முகாம்

புனித வெள்ளியை முன்னிட்டு மவுண்ட் தேவாலயத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது

Update: 2024-03-30 01:45 GMT

புனித வெள்ளியை முன்னிட்டு மவுண்ட் தேவாலயத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது


தூத்துக்குடியில் புனித வெள்ளியை முன்னிட்டு மவுண்ட் தேவாலயத்தில் இயேசுபிரான் உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூறும் வகையில் 50க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு ரத்ததானம் வழங்கினர். இயேசு பிரான் உலக மக்களுக்காக ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்ட தினம் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளியாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள மவுண்ட் தேவாலயத்தில் இயேசுபிரான் ரத்தம் சிந்தியதை நினைவு கூறும் வகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு வழங்கும் வகையில் ரத்தத்தை தானம் செய்தனர். இந்த ரத்ததான முகாமை தேவாலய பாதிரியார் கார்த்திக் கமாலியோ துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News