சேவை சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்

ஆத்தூரில் ரெட் கிராஸ்,மிட்டவுன் ரோட்டரி சங்கம்,வட்டார இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2024-04-28 10:19 GMT
சேலம் மாவட்டம், ஆத்தூர் விநாயகபுரம் தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆத்தூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆத்தூர் வட்டார இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமில் சேவை சங்கங்களின் இருந்தும் 50 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கினார்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனையின் சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த ரத்ததான முகாமில் சேவை சங்கங்களின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வட்டார இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News