வீராணத்தில் ரத்ததான முகாம் நிகழ்ச்சி

வீராணத்தில் ரத்ததான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-06-29 10:37 GMT

வீராணத்தில் இரத்த தான முகாம்

தென்காசி மாவட்டம் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத் துறை மற்றும் ஓரியன்ட் கிரீன் பவர் கம்பெனி லிமிடெட் சார்பில் இரத்ததான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை மருத்துவர்கள் மணிமாலா, இப்ராஹிம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 40மேற்பட்ட ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர். பின்னர், ரத்ததானம் செய்த ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News