தூய்மை பணியில் ஈடுபட்ட பா.ம.க வேட்பாளர்!

ஆரணி அருகே பாமக வேட்பாளர் கணேஷ் குமார் தூய்மை பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-02 16:56 GMT

வாக்கு சேகரிப்பு


campaign

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட எம்.பி தாங்கல் கிராமத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அ. கணேஷ்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் வேட்பாளரிடம் துடைப்பத்தைக் கொடுத்து பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பாமக வேட்பாளர் கணேஷ்குமாரும் வீதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்தார்.
Tags:    

Similar News