கழிவறையில் பெண் பிணம்
கழிவறையில் பிணமாக கிடந்த பெண் பிணம் - போலீசார் விசாரணை.;
By : King 24x7 Website
Update: 2023-11-26 12:13 GMT
கழிவறையில் பெண் பிணம்- போலீசார் விசாரணை.
பொள்ளாச்சி:ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் (35) வயதான சுரேஷ்குமார்.இவரது சித்தி 63 வயதான சாரதா மணி. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இதில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மற்றொருவர் மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் சாரதாமணி தங்கி இருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சாரதாமணியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு கழிவறையில் சாரதாமணி பிணமாக கிடந்துள்ளார். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.