காட்பாடி பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது

காட்பாடி பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-16 13:17 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காட்பாடி பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 17 வயது மதிக்கத்தக்க சிறார். 5 லட்சம் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்கள் கையகப்படுத்தபட்டு காட்பாடி போலீசார் நடவடிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போவது குறித்து தொடர் புகார்களின் அடிப்படையில் காட்பாடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனி அறிவுறுத்தலில் பேரில் காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர் ,

காட்பாடி குடியாத்தம் சாலையில் வாகனத்த தணிகையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தபோது அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டதில் அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் திருடியது தெரியவந்தது. உடனே அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட

தொடர் விசாரணையில் , குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறார் என்பதும் இவர் காட்பாடி, குடியாத்தம் சாலை, உழவர் சந்தை, வள்ளிமலை கூட்டு ரோடு, செங்குட்டை, காட்பாடி இரயில் நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 10 இருச்சக்கர வாகனத்தை

கையகப்படுத்தபட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

Tags:    

Similar News