பாம்பு கடித்து சிறுவன் பலி !
விளாக்குடி கிராமத்தில் பாம்பு கடித்ததில் சிறுவன் வழியிலேயே உயிரிழந்தான்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-27 09:23 GMT
மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாக்குடி கிராமத்தில் கார்த்திக் என்பவரின் மகன் மாதேஷ் (6) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்ததில் அவர் மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மாதேஷ் உயிரிழந்தார். இது குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.