வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை.போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 07:13 GMT
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
திண்டுக்கல்லை அடுத்த மாலப்பட்டி பிரிவு பெட்ரோல்பங்க் அருகே துபாய் கருப்பையா என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். உள்ளே சென்று பீரோக்களின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து துபாய் கருப்பையா புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.