குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

வெள்ளகோவில் மாந்தபுரத்தில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-05 06:37 GMT
வீணாகும் குடிநீர்
முத்தூர் - வெள்ளகோவில் சாலையில் உள்ளது மாந்தபுரம். இவ்வழியாக கொடுமுடியிலிருந்து வெள்ளகோவில், மூலனூர் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாந்தபுரம் விநாயகர் கோவில் சாலை வளைவு அருகில் குடிநீர் திட்ட பிரதான குழாய் அதிக அழுத்தம் காரணமாக உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குழாய் உடைந்து 3 வாரங்களாகியும் சரி செய்யப்படவில்லை. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News