இளம்பெண்ணை தாக்கிய சகோதரர்கள் கைது

Update: 2024-06-20 12:11 GMT

தாக்குதல் 

திருமயம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராமையா மகள் வேணி(24) மணமாகவில்லை. ராமையா உயிரிழந்த நிலையில் தாயார் வசந்தாவுடன் வசித்து வந்தார்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜார்ஜ் வாஷிங்டன். இவரது மகன்கள் அந்தோணிராஜ், லியோராஜ் இரு வீட் டாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்த வேணியை தகாத வார்த்தைகளால் திட்டி இருவரும் சேர்ந்து தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த வேணி திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து அந்தோணிராஜ், லியோராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News