ஆவடியில் ரயிலில் அடிபட்டு பஸ் டிரைவர் பலி

ஆவடியில் ரயிலில் அடிபட்டு பஸ் டிரைவர் பலியானர்.

Update: 2024-05-19 16:19 GMT

கோப்பு படம் 

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நித்யானந்தம், 43; பேருந்து ஓட்டுனர். இவரது மனைவி ரேகா, 38. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணி அளவில், ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். 

 அப்போது, அண்ணனுார் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடிக்கு காலியாக வந்த மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News