புதர் மண்டி கிடக்கும் கம்பன் கால்வாய் - வெள்ள அபாயம்

கம்பன் கால்வாயில், சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால், மழை நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

Update: 2023-11-15 09:24 GMT

புத்தர் மண்டியிருக்கும் கம்பன் கால்வாய் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாம்புரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது. இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் வாயிலாக, 22 ஆயிரத்து 235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கால்வாயில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் நாணல் மண்டி உள்ளதால், தண்ணீர் செல்வதை தடுக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, தைப்பாக்கம், ஒழுக்கோல்பட்டு, பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், நெல்வாய், தண்டலம், மேல்பொடவூர் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் கால்வாய் மற்றும் கரைகளின் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன. இதனால், வட கிழக்கு பருவ மழைக்கு தண்ணீர் செல்லும் போது, சீமைக் கருவேல மரங்கள் சாய்ந்து கரை உடைப்பு எடுக்கும் அபாயம் உள்ளது. மேலும், கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை உள்ளது. எனவே, வட கிழக்கு பருவ மழைக்கு முன், கம்பன் கால்வாய் மற்றும் கரையோரம் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என, விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News