திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம்

காட்டாங்கொளத்தூர் அருகே வேண்பாக்த்தில் காஞ்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-11 10:54 GMT

தேர்தல் பிரசாரம் 

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில், ஆலப்பாக்கம் ஊராட்சி, வேண்பாக்கம் கிராமத்தில் காஞ்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து,ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் முன்னிலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பேசினார்.

இக்கூடத்தில் திராவிட கழக தலைமைப் பேச்சாளர் வழக்கறிஞர்.அருள்மொழி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.அவர்களுடன் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகநாதன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன்,அவைத் தலைவர்,உள்ளாட்சி மன்ற தலைவர்கள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள்,வார்டு கவுன்சிலர்கள்,திமுக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News