கார் குண்டு வெடிப்பு சம்பவம்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Update: 2024-03-23 11:08 GMT

விசாரணை நடத்தும் அதிகாரிகள்

கோவையில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் இது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்து சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரணை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஜமேசா உமரி, இர்சாத் ஆகியோரை NIA அதிகாரிகள் காவலில் எடுத்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கோவையில் இஸ்லாமிக் தொழில்நுட்ப நிறுவனம், குனியமுத்தூர் அரபிக் கல்லூரி, ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி சென்றுள்ளனர். இந்த விசாரணை NIA அதிகாரி விக்னேஷ் தலைமையிலான குழுவினர் நடத்தி உள்ளனர்.

Tags:    

Similar News