தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் நடந்த தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியில் தொழில் தொடங்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2024-02-18 04:49 GMT

 தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அறிவுசார் மையத்தில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், ஓய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி இளங்கோ, திருச்சி, அண்ணா மேலாண்மை பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை சேர்ந்த சக்திவேல், லால்குடி, ஆசிரியர் பயிற்றுனர், நுண்கலை வல்லுனர் தமிழரசி, கோவை, பாரதியார் பல்கலைக்கழகம், அறிஞர் தொழில் நெறி  வழிகாட்டல் பேராசிரியை சத்யா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் பங்கேற்று, மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்கள், தொழில் தொடங்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினர்.
Tags:    

Similar News