திருமங்கலத்தில் சரக்கு வேன்கள் மோதல் : டிரைவர் பலி

திருமங்கலத்தில் சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2024-05-05 05:03 GMT

பைல் படம்

திருச்சியை சேர்ந்த வினோத்குமார் மினி வேன் டிரைவர் ஆன இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து திருச்சிக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் திருமங்கலம் ராஜபாளையம் ரோட்டில் புதுப்பட்டி அருகே முன்னால் சென்ற கண்டைனர் லாரியை முந்த முயன்ற போது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சேர்ந்த விக்னேஷ் மதுரையில் இருந்து தென்காசிக்கு காய்கறிகள் ஏற்றிக்கொண்டு எதிரே வந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு சரக்கு வேன்களும் நேருக்கு நேர் மோதியதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் காயம் இன்றி தப்பினார் இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News