மின்னல் தாக்கியதில் 2 வண்டி மாடுகள்

மையனுார் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 வண்டி மாடுகள் இறந்தன.

Update: 2024-05-18 07:10 GMT

வண்டி மாடுகள் பலி

 வாணாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் நேற்று குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை 5:15 மணியளவில் பலத்த மின்னல், இடியுடன் மழை பெய்தது.

இதில், மையனுார் கிராமத்தை சேர்ந்த கிறிஸ்துராஜ், 40; என்பவர் தனது மாட்டு வண்டியில் விளைநிலத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் மாடுகள் இரண்டும் சம்பவ இடத்திலேயே இறந்தன. கிறிஸ்துராஜ் காயமின்றி தப்பினார்.

Tags:    

Similar News